கட்டாயமாக இரண்டு திருமணம் செய்யவேண்டும்.. இல்லையென்றால் சிறை தண்டனை - விசித்திர சட்டம்.
நாம் வாழுற உலகம் ரொம்பவே வித்தியாசமானது.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசித்திர நிகழ்வை நாம் கேள்வி பட்டுகொண்டு தான் இருக்கின்றோம்.... இதில் முக்கியமானது சில நாடுகளும் அவர்கள் அமுலாக்கும் சட்டங்களும்.. சில நேரங்களில் எதாவது ஒரு விசித்திரமான சட்டங்களை இயற்றி உலகளவில் பேசுபொருளாக மாறிவிடும்.. அவ்வாறானதொரு சம்பவம் தான் ஆபிரிக்க நாட்டில் நடந்துள்ளது.
ஆபிரிக்க நாட்டில் செங்கடலையொட்டி உள்ள எரித்திரியா என்னும் சிறிய நாட்டில் அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருவதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே காலத்தை தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதனால் இதனை தடுக்கும் வகையில் எரித்திரியா நாட்டில் புதிய விசித்திர சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
அதெல்லாம் ஓகே பா... இங்க ஒரு கல்யாணம் பண்ணியே வாழமுடியால ரெண்டு கல்யாணம் பண்ண வர செலவயெல்லாம் யாரு பாத்துப்பான்னு தானே யோசிக்குறீங்க?
அதுக்குதான்... ஆண்கள் பற்றாக்குறையினால் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாலும் அந்த திருமணத்துக்கான செலவுகளையும் பின்னர் வீடு செலவுகளையும் அரசாங்கமே பொறுப்பெடுத்து கொண்டுள்ளது.
அதன்படி ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2க்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டாலும் அது குற்றமாக கருதப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு கணவரின் முதல் மனைவி இந்த திருமணத்தை எதிர்க்கக் கூடாது அவ்வாறு எதிர்த்தால் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி ட்விட்டரில் தீயாய் பரவ கென்யா மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த பல ஆண்கள் தங்கள் மனைவிகளை பெற்றுக்கொள்ள எரித்திரியா செல்ல போவதாகவும் ட்வீட் செய்தார்கள்.
இந்த மாதிரி சட்டம் நம்ம நாட்டுக்கு வந்தா?
உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும்...
மேலும் சுவாரஸ்யமான செய்திகளை தெரிந்து கொள்ள TAMIL HOT TOPIC
0 கருத்துகள்