Ticker

6/recent/ticker-posts

கடலுக்குள் விழுந்த மனைவி - இறுதியில் நடந்த சம்பவம் , கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

கடலுக்குள் விழுந்த மனைவி - இறுதியில் நடந்த சம்பவம் , கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

மனைவி கடலுக்குள் விழுந்ததாக எண்ணி போலீஸிடம் புகார் அளித்த கணவன். ஆனால் இறுதியில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 



கடந்த 2 ஆண்டுக்கு முன் ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணிற்கும் திருமணம் நடைப்பெற்றது. 


இதனால், இரண்டாவது திருமண நாளை கொண்டாட கணவனை கோவிலுக்கு அழைத்திருக்கிறார் மனைவி. அதன்படி, விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாசலம் கோவிலுக்கு தனது மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார் கணவர். 



கோவிலில் வழிபாடுகளை முடித்த பின் கணவனும் மனைவியும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த இளம்பெண் திடீரென காணாமல் போக கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த இடம் முழுவதும் தேடியுள்ளார் கணவன். ஆனால் எங்கு தேடியும் மனைவி கிடைக்காததால், காவல்துறையிடம் கடலுக்குள் விழுந்திருக்கலாம் என்று  புகார் அளித்திருக்கிறார்.


இந்த ஊரில் அந்த ஐந்து நாட்கள் எந்த பெண்ணும் ஆடை அணிய மாட்டார்களாம். குறிப்பிட்ட அந்த ஐந்து நாட்களில் நடக்கும் விதியசமான விரதம்... மேலும் படிக்க.


அதனால்  தேடுதல் பணியில்  இறங்கிய காவல்துறையினர்கள் . இதற்காக ராணுவ ஹெலிகாப்டர்கள், படகுகள் ஆகியவற்றையும் பயன்படுத்தி பல மணி நேரங்கள் துடுத்தலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மனைவி கிடைக்கவில்லை. 


அத்தபிறகுதான் போலீசாருக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. உண்மையாகவே அந்த இளம்பெண் கடலில் தான் விழுந்தாரா? என சந்தேகித்து மீண்டும் விசாரணையில் இறங்கினர்.



அப்போது தான் காவல்துறைக்கும் கணவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. கடலில் விழுந்ததாக சொல்லப்பட்ட பெண்ணை நெல்லூர் காவல்துறை அதிகாரிகள் உயிருடன் பிடித்திருக்கின்றனர்.


கூடவே அவரது காதலரும் இருந்திருக்கிறார். 21 வயதுடைய அந்த இளம்பெண் கணவனை ஏமாற்றி காதலனுடன் ஓட்டம் பிடிக்க இப்படி நாடகம் ஆடியிருப்பது தெரியவந்துள்ளது. இதை கேட்ட கணவன் அதிர்ச்சி அடைந்துள்ளார். 


இந்த சம்பவம் பொலிஸாரையும் அந்த பகுதி மக்களுக்கும் பரபரப்பை ஏட்படுத்தியுள்ளது. 



மேலும் பரபரப்பாகும் செய்திகளை படிக்க...  


கருத்துரையிடுக

0 கருத்துகள்