Ticker

6/recent/ticker-posts

பாஸ்போர்ட் வரிசையில் பிரசவம் - குழந்தையை பெற்றெடுத்த பெண்.

பாஸ்போர்ட் வரிசையில் பிரசவம் - குழந்தையை பெற்றெடுத்த பெண். 

BABY


பொருளாதார பிரச்சினையால் சிக்கி தவிக்கும் இலங்கை. இங்கு வாழும் மக்கள் இன்று எதை வாங்க சென்றாலும் அங்கு நீண்ட வரிசை உள்ளது. குறிப்பாக பெட்ரோல் வரிசை தொடர்ந்து நாள் கணக்கில் காத்திருக்கின்றனர். இலங்கையில் எப்படியாவது வாழ்ந்து விடலாம் என்று ஒரு வரிசை இருக்கும் பொது இன்னொரு பக்கம் எப்படியாவது நாட்டை விட்டு போனால் போதும் என்று இன்னொரு வரிசையும் இருக்கத்தான் செய்கின்றது. 

Sri Lanka passport office


ஆம், இன்றும் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுள்ளது. அவ்வாறு இலங்கையில் பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள  குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நிலையில் பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். 


இலங்கையின் ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான பெண் கடவுசீட்டை பெற்றுக்கொள்ள தொடர்ந்து இரண்டு நாட்கள் வரிசையில் காத்திருந்துள்ளார். அவ்வேலையிலேயே குழந்தையை பெற்றுள்ளார். தற்போது கொழும்பில் உள்ள காச்சல் வைத்தியசாலையில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இருவரும் நலமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளனர் என தகவல்கள் வெளியாகின. 



கருத்துரையிடுக

0 கருத்துகள்