Ticker

6/recent/ticker-posts

போராட்டக்களத்தில் ஜோடியின் கிஸ் போட்டோ வைரல், ரணகளத்தில் ஒரு குதூகலமா - Sri Lanka

Sri Lanka Crisis  : போராட்டக்களத்தில் ஜோடியின் கிஸ் போட்டோ வைரல், ரணகளத்தில் ஒரு குதூகலமா?



இலங்கையில் ஏட்பட்டுள்ள நெருக்கடி நிலையில் போராட்டங்கள் பலவும் அண்மையில் நடந்துகொண்டிருக்க அதை இந்த உலகமே கவனித்து கொண்டிருக்கின்றது. இந்த போராட்டங்களுக்கு மத்தியிலும் ஒரு ஜோடி முத்தம் கொடுக்கும் படம் வைரல் ஆகி வருகிறது.


இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையின் அதிபராகிய கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். இதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டார். 



இதனால் போராட்டங்கள் மிகவும் கடுமையானது . நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாது இலங்கை அதிபரின் மாளிகை மற்றும் பிரதமரின் மாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகை இடப்பட்டன. நிலைமை மோசமடைவதால்  இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.  


இந்த அசாதாரண சூழலில் ஒரு விசித்திரமான நிகழ்வும் அங்கு நடந்தது. இலங்கையில் போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு ஜோடி முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.


நியூஸ்வயர் தனது ட்விட்டரில் தலத்தில் இந்த படத்தை  பகிர்ந்துள்ளது. அதன் தலைப்பில், ‘கபள் கோல்ஸ்’ என்று எழுதப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகை இட்ட போதே இந்த ஒரு சம்பவமும் நடந்துள்ளது. 


இது போன்ற viral and trending செய்திகளை தெரிந்து கொள்ள TAMIL HOT TOPIC உடன் இணைந்திருங்கள். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்