Ticker

6/recent/ticker-posts

தன்னை தானே திருமணம் செய்த பெண் இந்தியாவின் முதல் பெண்...

தன்னை தான் இத்திருமணம் செய்யது கொண்ட  இளம் பெண்... இந்தியாவில் இதுவே முதல் முறை


குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் தன்னை தானே திருமணம் கொண்டு   இந்தியாவையே வியப்புக்குள்ளாக்கி உள்ளார். 


ஏனுங்க அம்முனி ஏன் இந்த வேண்டாத வேல அப்டினு கேக்க தோணுதா?




ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வதும் அவர்களின் சந்ததியை பெருகுவதும் இயற்கையோட நியதியாக உள்ளது.  அனால் இன்றைய நவீன உலகத்தில் இந்த நியதிக்கு மாறாக ஆணும், ஆணும் திருமணம் செய்து கொள்வது, பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வது  அவ்வபோது நிகழ்ந்து வருகிறது.


அனால் இப்போ இதுக்கெல்லாம் ஒரு படி மேல போட்டுதன்னை தானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஒரு கூட கிளம்பிட்டாங்க. 





இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள் 2020 ஆம் ஆண்டு பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண்ணும், பிரேசிலியன் மாடலான கிரிஸ் கேலரா என்ற பெண்ணும்  தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களை போலவே  தற்போது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் கஷமா பிந்து தன்னை தானே திருமணம் செய்து கொள்ள போகிறார். 


வதோதரா மாவட்டம், கோட்ரி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்   ஜுன் 8  அன்று பிந்துவின் திருமண சடங்குகள்  நடைபெற்றது. ஜுன் 11 அவரது வீட்டிலேயே திருமணமும் நடந்துள்ளது.  முதலாவதாக கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த பிந்து பிறகு தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் வீட்டிலேயே தமது திருமணத்தை நடத்த முடிவு செய்ததாக கூறுகிறார்.




இதை குறித்து அவர் கூறுகையில்தனக்கு  திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை எனவும் .தன்னை  மணமகளாக பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள சுய திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.


என்னை போல் யாரும் இந்தியாவில் உள்ளனரா என்று தேடி பார்த்தேன் அப்படி யாரும் இல்லை அதனால் என்னுடைய இந்த வித்தியாசமான முடிவை  பெற்றோரிடம் கூறினேன் அவர்களும் அதட்கு ஒத்துக்கொண்டார்கள்  என்றும் மற்ற பெண்களை போல திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு போக வேண்டியதில்லை நான் எனது வீட்டிலேயே இருப்பேன் என்றும் குறும்பாக கூறியுள்ளார். 


இது போன்ற viral and trending செய்திகளை தெரிந்து கொள்ள TAMIL HOT TOPIC உடன் இணைந்திருங்கள். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்