Ticker

6/recent/ticker-posts

காபி ஷாப்பில் ட்விட்டர் CEO இன் செயலால் வைரலாகும் புகைப்படங்கள்.

காபி ஷாப்பில் ட்விட்டர் CEO இன் செயலால் வைரலாகும் புகைப்படங்கள்.


ட்விட்டரின் இங்கிலாந்து அலுவலகத்துக்கு சென்றிருந்த பராக் அகர்வால் அங்கிருக்கும் காபி ஷாப்பின் ஊழியர் போல மாறி அங்கு வந்தவர்களிடம் ஆர்டர் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன. பராக் அகர்வாலுடன் ட்விட்டர் நிறுவனத்தின் மற்றொரு உயர்மட்ட நிர்வாகியும், நிதி அலுவலருமான நெட் சேகல் அங்கிருந்தோருக்கு பிஸ்கெட்டுகள் பரிமாறும் புகைப்படங்களும்   வெளியாகி உள்ளன. 



பராக் அகர்வால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  ட்விட்டர் நிறுவனத்தின் புதிய CEO-ஆக  பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் ட்விட்டர் நிறுவனத்தின் CEO-ஆக ஜேக் டார்சி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். அனால் அவர் திடீரென அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் புதிய CEO-ஆக பராக் அகர்வால் பொறுப்பேற்றார். 



பராக் அகர்வால்  இந்திய ஐஐடி நிறுவனங்களில் ஒன்றான IIT BOMBAY இல் இளங்கலை பட்டம் முடித்தார்.  2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். அந்த சமயத்தில் யாஹூ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பும்  இவருக்கு கிடைத்தது. அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் விளம்பரம் தொடர்பாக செயல்படும் பொறியாளராக பணியில் சேர்ந்தார். அதன்பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணியாற்றினார்.


ட்விட்டர் தளத்தின் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தியதில் முக்கியப் பங்கு இவருக்கு உண்டு. குறிப்பாக பயனாளர்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ட்வீட்களை காட்டும் செயற்கை நுண்ணறிவுத் திறனை இவர் மேம்படுத்தினார். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ட்விட்டர் தளம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் இலகுவானதாகவும் பிடித்ததாகவும் மாறியது. இதட்கு பிறகு ௨௦௧௮ ட்விட்டர் CEO ஆக நியமிக்கப்பட்டார்.  


கருத்துரையிடுக

0 கருத்துகள்