Ticker

6/recent/ticker-posts

மனைவியின் ஜீன்ஸால் உயிரிழந்த கணவன்! நடந்த விபரீதம் தெரியுமா?

மனைவியின் ஜீன்ஸால் உயிரிழந்த கணவன்! கல்யாணம் ஆன 4 மாதத்தில் நடந்த விபரீத செயல்.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா எனும் பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  



திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, அது ஆயிரம் காலத்து பயிர் என்றெல்லாம் கூறவது உண்டு, ஆனால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள  ஒத்துழைப்பு, புரிதலை பொருத்தே அவர்களின் வாழ்க்கை அமைகிறது. எத்தனை பொய்களைச் சொல்லி திருமணம் செய்திருந்தாலும் திருமணத்திற்கு பின்னர்  ஒவ்வொருவரின் உண்மை முகமும் வெளியில் தெரிந்துவிடும்.


ஜம்தாரா பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, அந்தோளன் (18) என்ற இளைஞர் புஷ்பா ஹெம்ப்ராம் (17) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  இதனிடையே, தனது மனைவியுடன் அடிக்கடி, அந்தோளன் சண்டை போட்டு வந்ததாகதாகவும் கூறப்படுகிறது.


இதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால், மனைவி அடிக்கடி ஜீன்ஸ் அணிவது தான். திருமணம் ஆனதற்கு முன்பு ஜீன்ஸ் அணிவது சரி, ஆனால் இப்போது உனக்கு திருமணமாகி விட்டது இப்போது ஜீன்ஸ் அணிந்து செல்ல கூடாது என தன் மனைவிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார் கணவர். இந்த ஒரு சண்டையே இந்த 4  மாதங்களாக நடந்து வந்துள்ளது. 



இந்த சூழ்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன் கோபால்பூர் கிராமத்தில் நடந்த கண்காட்சி ஒன்றுக்கு சென்று கலந்து கொண்டு  அந்தோளன் மனைவி வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.


இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தான்  என்ன உடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க கூடாது என மனைவி புஷாப் கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம்முற்றி கைகலப்பாக மாறியது, அப்போது சமையற்கட்டில் இருந்த கத்தியால் கணவனை  புஷ்பா சரமாரியாக குத்தினார், அதில் கணவர் ரத்த வெல்லத்தில் சரிந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் தன்பாத் உள்ள PMCH மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.  



அப்போது கணவர் அந்தோளன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்த புஷ்பாவின் மாமனார் தனது மருமகள் ஜீன்ஸ் அணியக்கூடாது என மகன் தடுத்ததால் மருமகள் தன் மகனை கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார்.


மனைவி புஷ்பாவும் தன் கணவனைப் தான் குத்திக் கொன்றதை ஒப்புக்கொண்டார். இவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது, இந்நிலையில் அங்கு வந்த போலீசார் மனைவி புஸ்பா மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

இது போன்ற viral and trending செய்திகளை தெரிந்து கொள்ள TAMIL HOT TOPIC உடன் இணைந்திருங்கள். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்