Ticker

6/recent/ticker-posts

மனைவியை பரிமாற்றி கொள்ளும் ஒரு பார்ட்டியில் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியியை மற்றவர்களுடன் பரிமாற்றியுள்ளார்.

மனைவியை பரிமாற்றி கொள்ளும் ஒரு பார்ட்டியில் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியியை மற்றவர்களுடன் பரிமாற்றியுள்ளார். 


டெல்லியில் தற்போது அடிக்கடி நடக்கும் மனைவிகளை மாற்றி அனுபவிக்கும் விருந்துக்குத் தொழில் அதிபர் தனது 30 வயதுடைய மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். 



பெண் ஒருவர், ''தனது கணவர் டெல்லியில் உள்ள மனைவிகளை மாற்றிக் கொள்ளும் விருந்துகளுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதாகவும், தனது சொந்த சகோதரனுடன் உடல் உறவை ஏற்படுத்திக் கொள்ள வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, உத்திர பிரதேச  போலீசார் திங்கள்கிழமை இரவு அவரது கணவர் மற்றும் அவரது மைத்துனர் மீது வழக்கு பதிவு செய்தனர். 


இதன்மூலம் முசாபர்நகர் நீதிமன்றத்தில், இந்த பெண்ணை கணவர் எவ்வாறு துன்புறுத்தினார் மற்றும் எப்படி அவ்வாறான பார்ட்டிகளுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்வாரென பெண் நீதிமன்றத்தில் விவரித்துள்ளார். இந்த பெண் ஜூன் 2021 திருமானவர் என்றும் இந்த பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணம் என்றும் தெரியவந்துள்ளது. 



மேலும் அவர் கூறுகையில் , இவாறான விருந்துகளில் கலந்து கொள்ள மறுத்தால் தன்னை கடுமையாக தாக்குவர் என்றும் கடந்த ஏப்ரல் 24 குறுகிராமில் உள்ள காவல் நிலையத்தில் இத பற்றி கூற வந்த போது  கணவரின் அடியாட்கள் தன்னை பிடித்து இதை யாரிடமாவது கூறினால் கொன்று விடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.  


சம்பவத்தன்று அவர் தனது தம்பியுடன் இருக்குமாறு மனைவியை வட்புறுத்தியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதற்கு உடன்பட மறுத்திருக்கிறார்.  இதனால் அந்த தொழில் அதிபர் மனைவியை கடுமையாக சித்ரவதை செய்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.  

இதனால் நான் உடல்ரீதியாகச் சித்ரவதை செய்யப்பட்டேன். என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.மேலும் நான் வேறு ஆண்களுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று கனவர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார். 


இது தொடர்பாக உத்தரபிரதேச நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் தொழில் அதிபர் மற்றும் அவரது தம்பி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது மட்டும் அல்ல இன்னும் பல பகுதிகளில் இவரது விருந்துகள் இடம்பெற்று வருகின்றது. சமீபத்தில் கேரளாவிலும் இவரது மனைவியை மாற்றிக்கொள்ளும் விருந்து நடந்துள்ளது இது இணையத்தில் மிகப்பெரிய  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்