Ticker

6/recent/ticker-posts

தஞ்சாவூரில் காணாமல் போன 300 ஆண்டு பழமையான பைபிள்

தமிழில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட சுமார் 300 ஆண்டுகள் பழமையான புதிய ஏட்பாடு பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சீகன் பால்க் என்பவரால், நாகையில் புதிய ஏற்பாடு பைபிள்  முதன்முறையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த பைபிளில் தஞ்சை மன்னராக இருந்த சரபோஜி என்ற மன்னரும் கையெழுத்திட்டிருந்தார். சுமார் ௩௦௦ ஆண்டுகள் பழமையான இந்த பைபிள் தஞ்சை சரஸ்வதி மகால் மியூசியத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த பைபிள் கடந்த 2005 ஆம் ஆண்டு காணாமல் போனது.

300 Years Old Tamil Bible

சுமார் 12 ஆண்டுகளின் பின்  பழமை வாய்ந்த இந்த பைபிளை கண்டுபிடிக்க வேண்டும்  கடந்த 2017 ஆம் ஆண்டு  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் புகார் அளித்து வழக்கு தொடர்ந்தார். அதைத்தொடர்ந்து திருட்டு  போன பைபிள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதில், மியூசியத்தில் இருந்து  காணாமல் போன 300 வருட பழமையான புராதன பைபிள் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதனடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள புராதன பொருட்களின் மியூசியங்கள் மற்றும்  ஏலம் விடும் நிறுவனங்கள் தொடர்பான இணையதளங்களை ஆய்வு மேற்கொண்டதில், தமிழ்நாட்டில் காணாமல் போன பழமையான பைபிள் லண்டனில் உள்ள கிங்ஸ் கலெக்ஷன்ஸில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, தமிழக காவல் துறையின் சிலை பிரிவு சிஐடி தெரிவித்துள்ளது.




இதையடுத்து பைபிளை யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலம் லண்டனில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர்  சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து பைபிளை திருடிச் சென்றது யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்